Thursday, November 26, 2009
பொதிகை தொலைக்காட்சி
பொதிகை தொலைக்காட்சி சில மாதங்களாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு ஒன்பது மணி முதல் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய ஒரு மிக நல்ல நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. நிகழ்ச்சியானது நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டு காவியத்தலைவன், எனக்காகப் பாடினார், வாழ்க்கைத் துளிகள் , தனிப்பாடல்கள் என்று தொடர்கிறது. பாடல்களின் தமிழ் இலக்கிய பின்னணியும் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையும் தமிழ் பேராசிரியர்களால் விளக்கிச் சொல்லப்படும் போது நமக்கு திரு கண்ணதாசனின் தமிழ் ஆளுகை எத்தனை ஆழமானது என்று புரிய வருகிறது. ஒரு சுகமான அனுபவம் . நீங்களும் பாருங்களேன் !
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment