Friday, April 15, 2016

இன்று ஸ்ரீ ராம நவமி . புண்ணிய தினம் . இணையற்ற இராமனின் திருவடிகளை நினைப்போம்.:

"அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன்
ஆருயிர்க்கு ஒரு துணையே அரசே பூவை
நிறம்பழுக்க அழகு ஒழுகும் வடிவக் குன்றே
நெடுங்கடலுக்கு அணையளித்த நிலையே வெய்ய
மறம்பழுக்கும் இலங்கை இராவணனைப் பண்டோர்
வாளியினால் பணிகொண்ட மணியே வாய்மைத்
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே  நின்
திருவருளே யன்றிமற்றோர் செயலி லேனே."
                                                           -அருட்சோதி இராமலிங்க சுவாமிகள்
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டு எழுத்தினால்."

நாடிய பொருள் கைகூடும்
ஞானமும் புகழும் உண்டாம்
வீட்டில் வழியதாக்கும்
வேரியங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை 
நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன்
தோள்வலி கூறுவோர்க்கே."
                                     கம்ப நாட்டாழ்வார்

No comments: